சென்னை: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டை யாருடையது? காணொளிக் குறிப்பு, நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டையின் வரலாறுசென்னை: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டை யாருடையது?

12 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தெற்கு நோக்கி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆலம்பரைக் கோட்டை. சென்னையில் இருந்து 110 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இடக்கழிநாட்டில் தான் அமைந்துள்ளது இந்த கோட்டை.

காலனி ஆதிக்கக் காலத்தில் வர்த்தக தேவைகளுக்காகவும், ராணுவ நோக்கங்களுக்காகவும் கட்டப்பட்ட கோட்டைகளில் ஒன்று தான் கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த கோட்டை.

தற்போது சிதிலமடைந்து காணப்படும் இந்த கோட்டையின் வரலாறு என்ன? இந்த கோட்டை வழியே வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் யார்? முழு விவரம் இந்த வீடியோவில்!

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு