இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும்  காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love

  இந்திய கடலோர காவல்படையினர்இராமேஸ்வரம்தனுஷ்கோடிபேசாளை