யாழ்.மாநகரசபை வழமை போலவே கூச்சல் குழப்பங்களுடன் தள்ளாட தொடங்கியுள்ளது.

சபைக்கான நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ். மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை (27)விசேட அமர்வுக்காக இன்று திகதியிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில்    முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு வெள்ளிக்கிழமை (27) காலை  ஆரம்பமாகியிருந்தது.

கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிந்தவுடன் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறிய முற்பட்டார்.

இந்நிலையில்  சபையின் உறுப்பினர் தர்சானந்த் குழக்கள் நியமனம் தொடர்பில் கருத்துக்களை கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே முதல்வர் கையாலாகாத நபராகவும் வெளியிலிருந்து இயக்கப்படும் நபராகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் சிபார்சின் பேரிலேயே மதிவதனி யாழ்.மாநகர முதல்வராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.