நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா?காணொளிக் குறிப்பு, நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா?நாம் தூக்கி எறியும் ஷூ, அதன் பிறகு என்னவாகிறது தெரியுமா?

59 நிமிடங்களுக்கு முன்னர்

800 கோடி உலக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் 24 பில்லியனுக்கும் அதிகமான ஷூ தயாரிக்கப்படுகிறது.

ஷூ பழையதானதும் அவை நேரடியாக குப்பையில் போடப்படுகின்றன. இறுதியில் குப்பைக் கிடங்குக்கு வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தூக்கி எறிந்த ஷூ ஏதேனும் ஒரு குப்பைக் கிடங்கில் இருக்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது.

வட இந்திய நகரமான ஆக்ரா, இந்தியாவின் 65% காலணிகளை தயாரிக்கிறது. ஆக்ராவில் நாள்தோறும் 10 லட்சம் ஜோடி ஷூ உற்பத்தி செய்யப்படுகிறது, அதன் விளைவாக 45 டன் கழிவுகளும் சேர்கின்றன.

சாதாரணமாக ஒரு ஜோடி காலணிகளை உருவாக்க ஓரிரு மூலப்பொருட்கள் மட்டுமல்ல, 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அதில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாதவை.

உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான காலணிகள் குப்பைக் கிடங்குகளில் சேர்ந்தால், அது மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பூமியையும் நிச்சயம் பாதிக்கும்.

முழு விவரம் காணொளியில்.

செய்தியாளர்- டிங்கிள் பாப்லி

ஒளிப்பதிவு/படத்தொகுப்பு- செராஜ் அலி

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு