Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரானில் இப்போது என்ன நிலவரம்? ஆயதுல்லா அலி காமனெயி ஆட்சி சிக்கலில் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், காஸ்ரா நாஜிபதவி, சிறப்பு செய்தியாளர், பிபிசி பாரசீக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இஸ்ரேலுடனான மோதலின்போது, இரானில் உள்ள ஒரு ரகசிய பதுங்கு குழியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பிறகு, 86 வயதான உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இப்போது ஏற்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தி வெளியே வர விரும்பலாம்.
இஸ்ரேலால் அவர் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்றும், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அரசின் உயர் அதிகாரிகளுக்கே அவரை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கத்தார் எமிர் மத்தியஸ்தம் செய்த பலவீனமான சண்டை நிறுத்தம் இருந்தபோதிலும், அவர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனக் கூறப்பட்டது.
இரானின் உச்ச தலைவரை கொல்ல வேண்டாம் என்று டிரம்ப் இஸ்ரேலிடம் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதைப் பற்றி எந்த உறுதியான பதிலும் அளிக்கவில்லை.
தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, வெளியே வரும்போது மரணமும், அழிவும் நிறைந்த ஒரு நிலப்பரப்பைக் காணப் போகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இருப்பினும், அவர் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி இந்த மோதலில் வெற்றி பெற்றதாகக் கூறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது புகழை மீட்டெடுக்க காமனெயி முயல்வார். ஆனால், அவர் புதிய சூழலையும், ஒரு புதிய காலத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
நாட்டை மிகவும் பலவீனமாக்கியுள்ள இந்த மோதல், அவரையும் முன்பு போலன்றி பலவீனமாக்கிவிட்டது.
அதிகார மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள்
பட மூலாதாரம், Pacific Press via Getty
படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிஇரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின்போது, இஸ்ரேல் இரானிய வான்வெளியின் பெரும்பகுதியை விரைவாகக் கைப்பற்றி, அதன் ராணுவ உள்கட்டமைப்புகளைத் தாக்கியது. புரட்சிகர காவல்படை மற்றும் ராணுவத்தின் முக்கிய தளபதிகள் பலர் விரைவாகக் கொல்லப்பட்டனர்.
ராணுவத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் தெளிவற்றதாகவும், சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளது. ஆனால் ராணுவம் மற்றும் புரட்சிகர காவல்படை தளங்கள் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சுகள், இரானின் ராணுவ சக்தி பெரிதும் சீரழிந்திருப்பதைக் குறிக்கின்றன. இரானின் ராணுவமயமாக்கல் நீண்ட காலமாக அந்நாட்டின் வளங்களில் பெரும் பகுதியை விழுங்கி வந்தது.
சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சர்வதேச தடைகளால் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதற்கு இரானில் நன்கு அறியப்பட்ட அணுசக்தி நிலையங்கள் காரணமாக இருந்துள்ளன.
இந்த நிலையங்கள், தற்போது வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளன. இருப்பினும், சேதத்தின் முழு அளவை மதிப்பிடுவது இன்னும் கடினமாகவே உள்ளது. இவை அனைத்தும் எதற்காக?
இந்தக் கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரானை பலவீனப்படுத்தியுள்ளது.இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் இரானை மோதலுக்கு இட்டுச் சென்றதற்குக் காரணமாக இருந்ததாக, 1989ஆம் ஆண்டு முதன்முதலில் தலைவரான ஆயதுல்லா காமனெயியை ஏராளமான இரானியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த மோதல், இறுதியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற சித்தாந்த நோக்கத்தைப் பின்பற்றியதற்காக, பல இரானியர்கள் அவரைக் கண்டிக்கிறார்கள். ஏனெனில் அதை அவர்கள் ஆதரிப்பதில்லை. அணு சக்தி அந்தஸ்தை அடைந்தால் அவரது ஆட்சி தோற்கடிக்க முடியாததாக மாறும் என்ற அவரது நம்பிக்கையை, அவர்கள் ‘முட்டாள்தனமானது’ எனக் கருதி குற்றம் சாட்டுகிறார்கள்.
பொருளாதாரத் தடைகள் இரானின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன. முன்பு ஒரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருந்த இரான், இப்போது தனது முந்தைய பெருமையின் நிழலாக மாறியுள்ளது.
“இத்தகைய கடுமையான அழுத்தத்தில் இரானிய ஆட்சி இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால் இது முடிவின் தொடக்கமாகத் தெரிகிறது” என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர் லினா காதிப்.
“‘உச்ச தலைவர்’ என்ற பதவியின் முழுமையான அதிகாரத்துடன் பதவி வகிக்கும், இஸ்லாமிய குடியரசின் கடைசி தலைவராக, அலி காமனெயி இருக்க வாய்ப்புள்ளது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடந்த 1989ஆம் ஆண்டு தலைவரான ஆயதுல்லா காமனெயி, இரானை இஸ்ரேலுடன் மோதலுக்கு இட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.மோதலின் உச்சத்தில், உயர்மட்டத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. மோதல் உச்ச கட்டத்தில் இருந்தபோது, முன்னாள் ஆட்சியின் சில முக்கிய நபர்கள், ஆயதுல்லாவிடம் இருந்து வேறுபட்டு, புனித நகரமான கோமில் வசிக்கும் நாட்டின் அமைதியான மத அறிஞர்கள் தலையிட்டு தலைமை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக, அரசு சார்புடைய ஒரு இரானிய செய்தி நிறுவனம் (one semi-official Iranian news agency) தெரிவித்துள்ளது.
“ஒரு கணக்கெடுப்பு நடைபெறும்” என்று செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்திலுள்ள இரானிய ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பேராசிரியரான அலி அன்சாரி கூறுகிறார்.
“ஆட்சித் தரப்பில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் தெளிவாகக் காணப்படுகின்றன. அதோடு, பொது மக்களிடையே மிகுந்த அதிருப்தி நிலவுகிறது” என்கிறார் அவர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’கோபமும் விரக்தியும் வேரூன்றிவிடும்’
கடந்த இரண்டு வாரங்களாக, பல இரானியர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமையையும், ஆட்சியின் மீதான ஆழ்ந்த வெறுப்பையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டனர். அவர்கள் ஆட்சியை ஆதரிக்காமல், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வதன் மூலம் நாட்டிற்காக ஒன்றிணைந்தனர். இப்போது, பரந்த ஒற்றுமையும் நெருக்கமான மனித உறவுகளும் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புறங்களைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில், குண்டுவீச்சுகளில் இருந்து தப்பியவர்கள் தங்கிக் கொள்ள உதவினர். கடைக்காரர்கள் அடிப்படைப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கினர். அக்கம்பக்கத்தினர், தங்களுக்கு அருகில் இருப்பவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி, ஏதேனும் தேவை இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டனர்.
இஸ்ரேல் இரானில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்பது பலருக்குத் தெரியும். பல இரானியர்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால், வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டுத் திணிக்கும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்பதற்கு அவர்கள் மறுக்கக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல இரானியர்கள் வெளிநாட்டு சக்திகளால் வடிவமைக்கப்பட்ட ஆட்சி மாற்றத்தை மறுக்கக்கூடும்.உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரிகளில் ஒருவரான ஆயதுல்லா காமனெயி, கிட்டத்தட்ட தனது 40 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டில் எழுந்த எந்தவொரு எதிர்ப்பையும் அழித்துள்ளார். எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்கள் சிறையில் இருக்கிறார்கள் அல்லது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள எதிர்க்கட்சிப் பிரமுகர்கள்கூட, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை ஒன்றிணைக்கும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை உருவாக்க முடியாமல் தவிக்கின்றனர்.
வாய்ப்பு கிடைத்தாலும், நாட்டிற்குள் ஆட்சியைக் கைப்பற்றக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவதில், அவர்கள் பயனற்றவர்களாக இருந்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற மோதல், இடைவிடாமல் தொடர்ந்திருந்தால், ஆட்சி வீழ்ச்சியடைய வாய்ப்பு இருந்திருக்கலாம்.
ஆனால், அதன் பிறகு எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்பதற்குப் பதிலாக, நாடு குழப்பத்தில் மூழ்கி, சட்ட ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டு விடும் என்று பலர் நம்பினர்.
“உள்நாட்டு எதிர்ப்பின் மூலம் இரானிய ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. உள்நாட்டில் இன்னும் வலுவாகவே உள்ள அந்த ஆட்சி, எதிர்ப்பை அடக்க உள்நாட்டு ஒடுக்குமுறையை மேலும் அதிகரிக்கும்” என்கிறார் பேராசிரியர் கதீப்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, திங்களன்று மத்தியஸ்தம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் நீடிக்கும் என்று இரானில் மிகச் சிலரே நினைக்கிறார்கள்.தற்போது இரானிய ஆட்சி இன்னும் கடுமையான அடக்குமுறைகளை விதிக்கலாம் என இரானியர்கள் அஞ்சுகின்றனர். இஸ்ரேலுடன் மோதல் தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் குறைந்தது 6 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோதலின் காரணமாக ஏற்படும் மரணத்தையும் அழிவையும்விட, காயமடைந்து அவமானப்படுத்தப்பட்ட ஆட்சி தனது சொந்த மக்களுக்கு எதிராக கோபத்தைக் காட்டும் நிலை குறித்தே, தனக்கு அதிகம் அச்சம் இருப்பதாக பிபிசி பாரசீக சேவையிடம் கூறினார் ஓர் இரானிய பெண்.
“அடிப்படைப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆட்சியால் வழங்க முடியாவிட்டால், கோபமும் விரக்தியும் அதிகரிக்கும்” என்று கூறும் பேராசிரியர் அன்சாரி, “நான் இதைப் படிப்படியாக நடக்கும் ஒரு செயல்முறையாகப் பார்க்கிறேன். குண்டுவெடிப்புகள் முடிந்த பிறகும், அது உடனே பொதுமக்கள் மனதில் வேரூன்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை”என்றும் குறிப்பிட்டார்.
திங்களன்று ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்தம் நீடிக்கும் என இரானில் மிகச் சிலரே நம்புகிறார்கள். மேலும், இஸ்ரேல் தற்போது இரானின் வான் வழியில் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால், அது இன்னும் தனது நடவடிக்கைகளை முடிக்கவில்லை எனவும் சிலர் கருதுகிறார்கள்.
பட மூலாதாரம், Reuters
இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள்
மலைகளுக்கு அடியில் உள்ள சுரங்கங்களில் பதுக்கப்பட்டிருப்பதால், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலால் கண்டுபிடிக்க முடியாமல் போனது. இதுவே அழிவில் இருந்து தப்பியதற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
“இரானிடம், நிலத்தில் இருந்து நிலத்துக்கு ஏவப்படும் சுமார் 2,500 ஏவுகணைகள் இருப்பதை அறிந்துதான் இஸ்ரேல் தனது முதல் தாக்குதலை மேற்கொண்டது” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி இயல் ஜமீர் தெரிவித்தார். இரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தின.
தற்போது இரான் கைகளில் இன்னும் மீதமுள்ள 1,500 ஏவுகணைகள் குறித்து இஸ்ரேல் கவலைப்படும்.
டெல் அவிவ், வாஷிங்டன் மற்றும் பிற மேற்கத்திய மற்றும் பிராந்திய தலைநகரங்களில், இரான் இன்னும் அணுகுண்டை உருவாக்க விரைந்து செயல்படக்கூடும் என்ற தீவிரமான கவலை நிலவுகிறது. ஆனால், அவ்வாறு செய்ய முயலவில்லை என இரான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொல்ல வேண்டாம் என்று அதிபர் டிரம்ப் இஸ்ரேலிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்ட குண்டுவீச்சுகளால், இரானின் அணுசக்தி நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, சிலவற்றைப் பயனற்றதாக மாற்றியிருக்கலாம். இருப்பினும், அதிகமாக செறிவூட்டப்பட்ட தனது யுரேனிய இருப்புகளை பாதுகாப்பான ரகசிய இடத்திற்கு முன்கூட்டியே மாற்றியதாக இரான் தெரிவித்துள்ளது.
“சுமார் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம், 90 சதவிகிதமாக செறிவூட்டப்பட்டால், அது தொழில்நுட்ப ரீதியாக எளிதான படியாகும். இது சுமார் ஒன்பது அணு குண்டுகளை உருவாக்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மோதல் தொடங்குவதற்கு முன், இரான் மற்றொரு புதிய ரகசிய செறிவூட்டல் நிலையத்தைக் கட்டியுள்ளதாகவும், அது விரைவில் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவித்தது.”
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுசக்தி கண்காணிப்பு நிறுவனத்துடனான (IAEA) இரானின் ஒத்துழைப்பைப் பெரிதும் குறைக்கும் தீர்மானத்தை இரானின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இது இன்னும் அதிகாரபூர்வமாக அமலாக ஒப்புதல் பெற வேண்டிய சூழலில் உள்ளது. ஆனால் அந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால், இரான், அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘என்பிடி’ (NPT) ஒப்பந்தத்தில் இருந்து விலகும் நிலை ஏற்படலாம்.
அதே நேரத்தில், இரான் அணுகுண்டுகளை உருவாக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என உச்ச தலைவருக்கு ஆதரவளிக்கும் கடும்போக்காளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆயதுல்லா காமனெயி தனது ஆட்சி இப்போது தப்பிப் பிழைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் இருக்கலாம். ஆனால், 86 வயதிலும் உடல்நிலை சரியில்லாத நிலையில், தான் நீண்ட காலம் வாழ இயலாது என்பதையும் அவர் உணர்ந்திருப்பார். அதனால், ஆட்சி தொடர்வதை உறுதி செய்ய, அதிகாரத்தை மற்றொரு மூத்த மத குருவுக்கோ அல்லது தலைமைக் குழுவுக்கோ ஒழுங்காக மாற்ற விரும்பலாம்.
எப்படி இருந்தாலும், உச்ச தலைவருக்கு விசுவாசமாக இருந்த புரட்சிகர காவல்படையின் மீதமுள்ள உயர் தளபதிகள், திரைக்குப் பின்னால் இருந்து அதிகாரம் செலுத்தும் முயற்சியில் ஈடுபடலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு