யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (26) தொடங்கியுள்ளது.

அர்ச்சுனா ராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் போது தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகின்றது. அரசுப் பணியில் இருந்து முதலில் ராஜினாமா செய்யாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவதைத் தடுக்க இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அருச்சுனா இன்னும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், பொது அதிகாரிகள் மீதான ஒழுங்கு அதிகாரம் பொது சேவை ஆணைக்குழுவிடம் உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார்.

இந்நிலையில் அருச்சுனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்புகளுக்காக  ஜூலை 2, வரை வழக்கு ஒத்திவைக்கப்படடுள்ளது.

எனினும் அருச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பது பெரும்பர்லும் உறுதியாகியுள்ள நிலையில் ஏற்படும் வெற்றிடத்திற்கு யார் நியமிக்கப்படுவரென்ற  கேள்வி எழுந்துள்ளது.