யாழ் பல்கலைக்கழத்தில் தமிழின அழிப்பின் பதாதைகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்  இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக பல்கலைக்கழக முன்றலில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.