“செம்மணி படுகொலை நாயகர்கள்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகையை இருவர் கைகளில் ஏந்தி இருந்தனர் 

யாழ் . வளைவுக்கு அருகில், செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை போராட்ட களத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  சென்றிருந்தார். 

அதன் போது அங்கு நின்ற கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராசா என்பவர் சந்திரிக்கா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகையை கைகளில் ஏந்திய வாறு காணப்பட்டார்