செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. 

செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில்  நேற்று முன்தினம் திங்கட்கிழமை அணையா தீபம் ஏற்றப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.