காசா தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈரான் மீதான தாக்குதல் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

மேலும் ஈரான் நீண்ட காலத்திற்கு அணு ஆயுதங்களை உருவாக்காது என்று வலியுறுத்தினார்.

ஈரான் தனது அணுசக்தி நிலையங்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, நீண்ட காலத்திற்கு குண்டுகளை உருவாக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க தாக்குதல்கள் முழுமையான அழிவை ஏற்படுத்துவதாகவும், ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை பல தசாப்தங்களுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக  அவர் விவரித்தார்.

தாக்குதல்கள் ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்களை அழிக்கத் தவறிவிட்டன என்றும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் குவிப்பையோ முழுமையாக அகற்றவில்லை என்றும் ஆரம்ப உளவுத்துறை மதிப்பீடு குறித்த சி.என்.என் மற்றும் நியூயோர்க் ரைம்ஸ் அறிக்கை வெளியாகியதை அடுத்து இந்தச் செய்தியை டிரம்ப் தெரிவித்ததோடு ஊடகங்களின் போலிச் செய்தியையும் அவர் மறுத்தார்.

அதே நேரத்தில் காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினார்.

ஈரான் மீதான தாக்குதல்கள், காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க உதவும் என்று டிரம்ப் கூறினார்.