யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக் காலையில் காணவில்லை என்றும், அவரைத் தேடிய போது கிணற்றில் சடலமாக காணப்பட்டார் என மரண விசாரணைகளில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

  இலங்கைசடலமாக மீட்புசுதந்திரபுரம்யாழ்ப்பாணம்