Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சங்கு வேட்பாளர் மயூரன் திட்டமிட்டு தவிசாளர் தெரிவில் புறக்கணிக்கப்பட்டாரா? நடுநிலைமை வகித்த சைக்கிள் உறுப்பினரை பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்க சின்னத்தில் சாவச்சேரி பிரதேச சபை சார்பில் மயூரன் வெற்றி பெற்றார்.
தவிசாளர் தெரிவில் சங்கு சைக்கிள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என வெகுவாக நம்பப்பட்ட நிலையில் சைக்கிள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் மயூரனை தவிசாளராக ஏற்பதில் நடுநிலை வகித்ததால் திருவிளச்சீட்டு மூலம் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதே நேரம் உபதவிசாளராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இ.யோகேஸ்வரன் தெரிவாகியிருந்தார்.
மேற்படி தவிசாளர் தெரிவு பெரும்பான்மை உறுப்பினர்களின் தெரிவுக்கு அமைவாக பகிரங்க முறைப்படி இடம்பெற்றிருந்தது.இதன் போது சைக்கிள்-சங்கு கூட்டணி சார்பாக செ.மயூரனும், இலங்கை தமிழரசு சார்பில் பொ.குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.
மேற்படி தெரிவுகளில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர்.
அதன்பின்னர் சைக்கிள்-சங்கு கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறியமையால் இரண்டு தவிசாளர் வேட்பாளர்களும் தலா 10வாக்குகளைப் பெற்றிருந்தனர்.அதன் பின்னர் திருவுளச்சீட்டு ஊடாக தமிழரசின் வேட்பாளர் குகதாசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதேநேரம் உபதவிசாளர் தெரிவின் போது சைக்கிள்-சங்கு கூட்டணி சார்பில் இ.யோகேஸ்வரனும்,தமிழரசு சார்பில் சி.பிரபாகரனும் முன்மொழியப்பட்டிருந்தனர்.
இந்த வாக்கெடுப்பின் போது தவிசாளர் தெரிவில் வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறிய சைக்கிள்-சங்கு கூட்டணி உறுப்பினர் உப தவிசாளர் வேட்பாளர் யோகேஸ்வரனுக்கு வாக்களித்திருந்த நிலையில் அவர் 11வாக்குகளைப் பெற்று உபதவிசாளராக தெரிவாகியிருந்தார்.
அதேநேரம் சாவகச்சேரி பிரதேசசபையின் சைக்கிள் கட்சி உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு காரணமாக தவிசாளர் தெரிவுக்கு சமுகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி சபையில் சைக்கிள் சங்கு கூட்டணி இலகுவாக ஆட்சியமைக்கக்கூடிய நிலைமை அமைத்திருந்தும் அதனை தவறவிட்டுள்ளது.சாவகச்சேரி பிரதேசசபையில் வீடு-08,சைக்கிள்-07,தேசிய மக்கள் சக்தி-06,சங்கு-05 ஈ.பி.டிபி-01 மற்றும் மான் ஒரு ஆசனங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது…
தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் சைக்கிள் சங்கு கூட்டணி முடிவுகளுக்கு மாறாக சைக்கிள் கட்சியை சேர்ந்த ஒருவர் நடுநிலை வகித்தமை ஏற்றுக் கொள்ள முடியாது.
வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர் நடுநிலைமை வகித்தார் அவர் சபையை விட்டு செல்ல முன்னரே அவருக்கான விளக்கத்துடன் கூடிய தற்காலிக விலகல் கடிதம் கட்சியின் பொதுச் செயலாளர் ஊடகங்களில் வெளிவந்துவிட்டது.
அது சரியான தீர்மானம் கட்சியின் முடிவுகளுக்கு அப்பால் செயல்படுவதாயின் கட்சி நீக்குவதில் இந்த தயக்கமும் இல்லை அதை விமர்சிப்பவர்கள் கட்சிகளில் போட்டியிட வேண்டியது தேவையும் இல்லை.
இவ்வாறான நிலையில் சாவச்சேரி பிரதேச சபையில் நடுநிலைமை வகித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை ஏன் இன்னும் நீக்கவில்லை என்பது கேள்வியாக உள்ளது.