சுமார் 3.69 மில்லியன் ரூபாய் வருமான வரி செலுத்தாததற்கு எதிராக உள்நாட்டு வருவாய் ஆணையர் தாக்கல் செய்த வழக்கில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை கைது செய்து முன்னிலைப்டுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (23.06.25) பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

2010-2012 ஆண்டுகளுக்கான தொழிலதிபர் வாஸ் குணவர்தன வருமான வரி செலுத்தாதது தொடர்பாக உள்நாட்டு வருவாய் ஆணையர் 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

மேலும் வழக்குத் தொடுப்பவர் தரப்பில் முன்னிலையான தினேஷ் பெரேரா, பிரதிவாதிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கூடுதல் நீதிபதி பவித்ரா சஞ்சீவனி பதுராஜா, பிரதிவாதியை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த உத்தரவிட்டு பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.