ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். 

அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 

விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். 

மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றம் சுற்றுலா அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், நாடாhளுமன்ற உறுப்பினர்கள், சிரேஸ்ட அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடலும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஆணையாளர் செம்மணிக்கு பயணிக்க எந்தவொரு தடையுமில்லையென இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதேவேளை திருகோணமலைக்கும் பயணிக்கும் அவரை தமிழ் தரப்புக்கள் பலவும் வரவேற்பதாக தெரிவித்துவருகின்றன.