இஸ்ரேல், ஈரானில் புதிய தாக்குதல்கள்

இஸ்ரேலில் அதிகாலை 2:30 மணியளவில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் வருவதாக இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்தது. இது டெல் அவிவ் உட்பட மத்திய இஸ்ரேலின் சில பகுதிகளிலும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையிலும் வான்வழித் தாக்குதல் சைரன்களைத் தூண்டியது .

டெல் அவிவ் மீது ஏவுகணைகளை தங்கள் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமை, மத்திய ஈரானில் உள்ள ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதளங்களுக்கு எதிராக புதிய அலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.