யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்

காரைநகர் களபூமியை சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஆலயத்திற்கு செல்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை (19.06.25) வீட்டில் தயாராகிக்கொண்டிருந்த வேளை, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

வீட்டில் இருந்தோர் அவரை உடனடியாக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love

  பெண் உயிரிழப்புமயங்கி விழுந்து