Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இஸ்ரேல் – இரான் மோதல் எவ்வாறு தொடங்கியது? அடுத்த கட்டம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், லானா லாம், சோபியா ஃபெரீரா சாண்டோஸ், ஜரோஸ்லாவ் லுகிவ் மற்றும் நாதன் வில்லியம்ஸ்பதவி, பிபிசி நியூஸ்21 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த வாரம் தொடங்கிய இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இரு தரப்பிலிருந்தும் கோபமான வார்த்தைப் பிரயோகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது இரானின் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையலாமா என்று பரிசீலித்து வருகிறார்.
இரானில் உள்ள அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியபோது இது தொடங்கியது, பின்னர் இரான் இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது.
இரானின் சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை இஸ்ரேலிய தாக்குதல்களில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இரானிய தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல் இரானின் அணுசக்தித் திட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.ஜூன் 12 வியாழக்கிழமை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF- ஐடிஎஃப்), டெஹ்ரானின் மாவட்டம் 18இல் உள்ள மக்களை வெளியேறுமாறு கூறியது. இதில் ராணுவ கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அடங்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சில மணி நேரத்திற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:30 மணிக்கு டெஹ்ரானில் முதல் தாக்குதல்கள் நடந்ததாக இரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அந்நாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக பிபிசி பத்திரிகையாளர்களால் இரானில் இருந்து செய்திகளை சேகரிக்க முடியாது என்பதால், இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவது கடினமாக உள்ளது.
டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 225 கி.மீ (140 மைல்) தொலைவில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தியது, இதனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதல் இரானின் அணுசக்தித் திட்டத்தின் ‘இதயத்தை’ குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
“இரானின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், இரானால் மிகக் குறுகிய காலத்தில் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும்” என்று நெதன்யாகு கூறினார். இரான் தனது அணுசக்தித் திட்டம் ஆக்கப்பூர்வமானது என்று வலியுறுத்துகிறது.
இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி, “இஸ்ரேல், இதற்கு ஒரு கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும்” என்று கூறினார். இரானின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலின் தாக்குதல்களை ‘போர் பிரகடனம்’ என்று அழைத்தார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலில் உள்ள பல்வேறு இலக்குகள், ராணுவ மையங்கள் மற்றும் விமான தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, இரான் தனது பதிலடியைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல் ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ என்று அழைக்கப்பட்டது.
இஸ்ரேலை நோக்கி சுமார் 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலின் இரும்பு டோம் அமைப்பால் இடைமறிக்கப்பட்டதாகவும் ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
இத்தகைய பதிலுக்கு பதில் தாக்குதல்கள் பல நாட்களாகத் தொடர்கின்றன.
இருப்பினும், இரானிய தாக்குதல்களின் அளவு சமீபத்தில் குறைந்துள்ளது. இது இஸ்ரேலிய தாக்குதல்கள் இரானின் ராணுவத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறிக்கலாம் என்று பிபிசியின் ஹ்யூகோ பச்சேகா தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயிஇஸ்ரேலின் தாக்குதல்களில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி உள்பட பல உயர்மட்ட இரானிய அதிகாரிகளும், இரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாஸி உள்பட பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தினர் குழந்தைகள் உள்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது.
இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது பல கட்டங்களாக தாக்குதல்களை நடத்தியதாகவும், டெல் அவிவ் மற்றும் வடக்கு இஸ்ரேலை இலக்காகக் கொண்ட ஏவுகணைகளின் தாக்குதலை இடைமறித்ததாகவும் ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவல்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இரானியப் படைகள் தெரிவித்தன, மேலும் முக்கிய இஸ்ரேலிய நகரங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.டெஹ்ரானில், இரான் அரசு செய்தி முகமையின் கட்டடம் தாக்கப்பட்டபோது, தொகுப்பாளர் ஒருவர் ஒளிபரப்பின் நடுவிலேயே ஸ்டுடியோவை விட்டு தப்பி ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும் இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) இஸ்ரேலிய ராணுவம் டெஹ்ரானின் முழு வான்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், இரானின் ஏவுகணை லாஞ்சர்களில் மூன்றில் ஒரு பகுதியை அழித்ததாகவும் அறிவித்தது.
வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் நான்கு வெவ்வேறு இடங்களில் இரானிய ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் குறைந்தது 224 பேர் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், இஸ்ரேல் 24 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் டெல் அவிவ், ஹைஃபா, தம்ரா, ரிஷோன் லெசியோன் மற்றும் பேட் யாம் ஆகிய இடங்களில் இருந்தனர், குறிப்பாக பேட் யாம் பகுதியில் 10 மாடி குடியிருப்பு ஒன்று தாக்கப்பட்டது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரானிய தாக்குதலில் சேதமடைந்த பேட் யாம் பகுதியில் உள்ள ஒரு கட்டடம்.தனது அடுத்தகட்ட நகர்வை பரிசீலிக்கும் அமெரிக்கா
இரானிய அணுசக்தி தளங்களை குறிவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளில் இணைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக, அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, பிபிசியின் அமெரிக்க கூட்டுச் செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்குப் பிறகு செவ்வாயன்று டிரம்பும் நெதன்யாகுவும் தொலைபேசியில் பேசினர்.
இரானின் ‘நிபந்தனையற்ற சரணடைதல்’ குறித்து அமெரிக்க அதிபர் முன்னதாக சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்திருந்தார், மேலும் இரானின் ஆயதுல்லா அலி காமனேயி எங்கே இருக்கிறார் என்பது அமெரிக்காவிற்கு தெரியும், ஆனால் ‘இப்போதைக்கு’ அமெரிக்கா அவரைக் கொல்லாது என்றும் கூறினார்.
இரான் தலைவரைக் கொல்ல இஸ்ரேல் வைத்திருந்த திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அன்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியாகின.
இதற்கு பதிலாக, அமெரிக்க ராணுவம் இந்த மோதலில் தலையிட்டால் ‘சரிசெய்ய முடியாத அளவுக்கு பேரழிவு’ ஏற்படும் என்று காமனேயி டிரம்பை எச்சரித்தார்.
திங்களன்று ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து முன்னதாகவே வெளியேறிய டிரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வாஷிங்டனுக்கு தான் திரும்பச் செல்லவில்லை என்றும், போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை தான் விரும்புவதாகவும்’ கூறினார்.
‘ஒரு உண்மையான முடிவு வேண்டும்’ என்று விவரித்த டிரம்ப், அதில் ‘முழுமையான சரணடைதலும்’ அடங்கும் என்றார்.
அணுசக்தி திட்டம் தொடர்பான ஒரு புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இரான் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று டிரம்ப் முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த புதிய ஒப்பந்தம் இரானின் அணுசக்தி திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை நோக்கமாக கொண்டது.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான புதிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து முன்கூட்டியே புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டொனால்ட் டிரம்ப் பேசினார்.மோதல் இந்தக் கட்டத்தை எட்டியது எப்படி?
கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்கள் ‘இஸ்ரேலின் இருப்புக்கு எதிரான இரானிய அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான, திட்டமிடப்பட்ட ஒரு ராணுவ நடவடிக்கை” என்று நெதன்யாகு கூறினார்.
இந்த அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கும்வரை இஸ்ரேலின் நடவடிக்கை பல நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறினார்.
பிபிசியிடம் பேசிய இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர், “இரானிடம் சில நாட்களுக்குள் அணு குண்டுகளை உருவாக்கும் அளவிற்கு போதுமான அணுசக்தி பொருட்கள் இருப்பதாக” தெரிவித்தார்.
ஆனால், தாங்கள் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை என்றும், தங்களது அணுசக்தி நடவடிக்கைகள் அமைதிக்கானவை என்றும் இரான் கூறியுள்ளது.
ஏப்ரலில் தொடங்கிய இரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்க பேச்சுவார்த்தைகள் முடங்கியதாகத் தோன்றிய சமயத்தில், இந்தத் தாக்குதல்கள் ஆரம்பித்தன.
அணு ஆயுதத்தை உருவாக்குவதிலிருந்து இரானை தடுக்கும் வகையில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று டிரம்ப் நம்பினார், ஆனால் சமீபத்திய தாக்குதல்களின் காரணமாக, திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு, இரானும் இஸ்ரேலும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒன்றுக்கொன்று எதிராக பல வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. இருப்பினும், கடந்த ஆண்டின் இஸ்ரேலிய தாக்குதல்கள், தற்போதைய தாக்குதல்கள் அளவுக்கு விரிவானதாக கருதப்படவில்லை.
இரானின் அணுசக்தி திட்டம்
பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP via Getty Images
படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025)இரான் நீண்ட காலமாக தனது அணுசக்தி திட்டம் அமைதிக்கானது மற்றும் பொதுமக்கள் நலன்களுக்காக மட்டுமே என்ற பதிலையே தொடர்ந்து கூறி வருகிறது. இரானை சுற்றி பல அணுசக்தி வசதிகள் உள்ளன, அவற்றில் சில இஸ்ரேலிய தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டுள்ளன.
ஆனால் பல நாடுகளும், உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-வும் (ஐஏஇஏ) இந்த அணுசக்தி திட்டம் பொதுமக்களுக்கானது மட்டுமே என்பதை நம்பவில்லை.
இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, கண்காணிப்புக் குழுவின் ஆளுநர் குழு ஜூன் மாத தொடக்கத்தில் இரான் அதன் அணு ஆயுதப் பரவல் தடை உறுதிமொழிகளை மீறியதாக முறையாக அறிவித்தது.
அறிவிக்கப்படாத அணுசக்தி பொருட்கள் மற்றும் அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு பற்றிய முழுமையான பதில்களை வழங்குவதில் இரானின் ‘பல தோல்விகளை’ அது மேற்கோள் காட்டியது.
முந்தைய ஐஏஇஏ அறிக்கை, இரான் யுரேனியத்தை 60% தூய்மைக்கு, ஆயுத தரத்திற்கு நெருக்கமாக செறிவூட்டியதாகவும், ஒன்பது அணுகுண்டுகளை தயாரிக்கும் திறனைக் கொண்டிருப்பதாகவும் கூறியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு