முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற தமிழ் மீனவர் காணாமல் போயுள்ளார்.இதனிடையே அவர் சட்டவிரோத சிங்கள மீன்பிடியாளர்களால்; கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என  சந்தேகம் எழுந்துள்ளது.

முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இன்று மீனவர்கள் மீனவர் சென்ற மீன்பிடி படகை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.எனினும் படகிலிருந்த மீனவர் இதுவரை கரை சேரவில்லை 

ஆவர்; சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் 

சுனாமி பேரவலத்தில் தன்னுடைய ஐந்து பிள்ளைகளை பறிகொடுதிருந்த நிலையில்  சிலாவத்தை தீர்த்தக்கரையில்  வசித்துவரும் வின்சன்டிபோல்  அன்ரனிகருணல் (அருமை) எனும் 62 வயதுடைய மீனவரே காணாமல் போயுள்ளார்.

தென்பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள் மற்றும் புல்மோட்டை பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைகளை  பாவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.அதனுடைய பின்னணியாக தமிழ் மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது