திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலைக்கெதிராக குரல் எழுப்பிய இளைஞன் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள விகாரதிபதியின் முறபை;பாட்டையடுத்து கைதாகியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை- மூதூர் 3ம்கட்டைமலை புத்தர் சிலை விவகாரத்தால்  விகாராதிபதியின் முறைப்பாட்டில் கைதான இளைஞனுக்கு நேற்று புதன்கிழமை (18) அன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

மூதூர் 3ம் கட்டை மலை விகாராதிபதி, அ.ரமேஸ் என்பவருக்கு எதிராக மூதூர் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (18)  மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

புத்த சிலை வைக்கப்பட்ட காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட காணி உறுதி இருக்கிறது என சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர். 2015 காலப்பகுதியில் படையினரால் பலாத்காரமாக முகாம் அமைக்கப்பட்டதுடன் புத்தர் சிலையையும் நிறுவியுள்ளனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020ல் வெளியேறும் போது பிறகு வந்து புத்தர் சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றுள்ளனர் . 

ஆனால், இன்று வரை அது எடுக்கப்படாததால் அதே இடத்தில் ரமேஸ், புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலையையும் வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்திருந்தார் . 

இந்நிலையில் கடந்த பொசன் போயா தினத்தன்று  விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார்.அதனை ரமேஸ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு காவல்துறையில்; விகாராதிபதி முறைப்பாடு செய்ததையடுத்து ரமேஸ் கைதாகியிருந்தார்.