முன்னாள் அரச அமைச்சர்கள் சிறை செல்வது தொடர்கையில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் சந்துலா ரம்புக்வெல்ல ஆகியோர் மீண்டும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலங்களை பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது மனைவி மற்றம் மகள் ஆகிய மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் அமலி ரம்புக்வெல்ல ஆகியோர் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் இன்று உத்தரவிட்டார். பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.