ஈரான் திணிக்கப்பட்ட போரையோ அல்லது அமைதியையோ ஏற்றுக்கொள்ளாது. அத்துடன் சரணடையாது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்தார்.

தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் அயத்துல்லா அலி கமேனி உரையாற்றும் போது இக்கருத்தை வெளியிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதே போல் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும் என்று 

திணிப்புக்கு முகங்கொடுத்து இந்த நாடு யாருக்கும் சரணடையாது.

ஈரானையும் அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள் ஈரானியர்கள் அச்சுறுத்தலின் மொழிக்கு சரியாக பதிலளிப்பதில்லை என்பதை அறிவார்கள் என்று டிரம்ப் கூறியதையும் கமேனி சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத விளைவுகளுடன் இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும்.

இஸ்ரேல் அதன் தவறுக்காக தண்டிக்கப்படும் என அயத்துல்லா அலி காமெனி தனது உரையில் தெரிவித்தார்.