அமெரிக்காவுடன் இராஜநத்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் தயாராக உள்ளதாக என ரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய்யிடம் கேட்டபோது, இராஜதந்திரம் ஒருபோதும் முடிவடையாது என்று அவர் கூறினார். ஆனால் ஈரான் இனி அமெரிக்காவை நம்பவில்லை என்றும் கூறினார்.

இந்தப் போர் ஒரு இராஜதந்திர செயல்முறையின் மத்தியில் திணிக்கப்பட்டது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை மஸ்கட்டில் இருக்க வேண்டியிருந்தது. அவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்த ஆக்கிரமிப்பைத் தொடங்கினர். ஈரான் இராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு முழுமையாக தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

ஈரான் அமெரிக்காவை உண்மையில் நம்பவில்லை. ஏனென்றால் அமெரிக்கா பச்சைக்கொடி காட்டாமல் இஸ்ரேல் இந்தப் போரைத் தன்னிச்சையாகத் தொடங்கியது என்றால் அதை இந்த பிராந்தியல் உள்ளவர்கள் யாரும் நம்பமாட்டார்கள் என எஸ்மாயில் பக்காய்  கூறினார்.

எனவே, உலகளாவிய சக்தியாக இருக்க வேண்டிய ஒரு நாட்டின் நம்பகத்தன்மை ஆபத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம், லெபனான், சிரியா மற்றும் பிற இடங்களில் செய்யப்பட்ட இந்த அட்டூழியங்கள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட சர்வதேச சட்டம், சர்வதேச சட்டம் ஆபத்தில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, முழு சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க தங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என எஸ்மாயில் பக்காய்  மேலும் தெரிவித்தார்.