யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதாக யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  நாளைய தினம் புதன்கிழமையும் எரிபொருள் நிலையங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வட பிராந்தியத்திற்கு  250,800 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Spread the love

  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்எரிபொருள்எரிபொருள் நிலையங்கள்யாழ் மாவட்டம்