ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அனைத்து குடிமக்களையும் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி  சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அணு ஆயுத மேம்பாட்டைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தை நாடு நிராகரித்ததாகக் கூறி, ஈரானியர்கள் தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நான் கையெழுத்திடச் சொன்ன ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன ஒரு அவமானம், மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன்! அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும்!” என டிரம்ப் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.