1990ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண நகரை அண்மித்த மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.புதைகுழிகள் தொடர்பில் டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மண்டைதீவு, வேலணை மண்கும்பான் மற்றும் அல்லைப்பிட்டி கொலைகள் மற்றும் புதைகுழி விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் முறையாக நடத்தப்பட வேண்டும்.இராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த மக்கள் படையினரால் பிணையாளிகளாக பிடித்து செல்லப்பட்டிருந்தனர். அப்போதைய இராணுவத்தின் துணை ஆயுத குழுவாக இருந்த டக்ளசி;டம் மக்கள் முறையிட்டுள்ளனர்.

இருப்பினும் அது குறித்து கணக்கில் எடுக்காத டக்ளசினால் அங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டனர் ஆகையால் இது தொடர்பில் டக்ளசிடமும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனவும் சி.சிறீதரன்  தெரிவித்துள்ளார். 

இதனிடையே வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை . சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

அத்துடன் மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.