அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? – அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலிடம் F-35 போன்ற அமெரிக்கத் தயாரிப்பு ஜெட் விமானங்கள் உள்ளன, ஆனால் இரானில் அதன் இலக்குகளை அடைய அவை போதுமானதா?எழுதியவர், ஜோனாதன் பீல்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானுடனான இஸ்ரேலின் மோதலை பார்க்கும்போது, அது பொருந்தாத ஒன்றாக தோன்றலாம், அதாவது 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 8.8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பெரிய நாட்டுடன் மோதுகிறது.

ஆனால், இஸ்ரேலின் வலிமையான மற்றும் அதிநவீன, அமெரிக்காவால் மட்டுமே வழங்கப்படும் பெரிய ஆயுதக்கிடங்குடன் கூடிய ராணுவப் படைகள் காரணமாக, அந்நாட்டால் தன்னைவிட பெரிய எதிரியை விட மேலோங்கி இருக்க முடிகிறது.

மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போரில் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் குறித்து பிபிசி இங்கே ஆராய்கிறது.

இரான் இதுவரை சாதித்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

டெஹ்ரானின் வான்வெளியை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டதாக, இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இரானின் சில பழைய போர் விமானங்கள் புறப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை எனும் நிலையில், இஸ்ரேலின் கூற்று முற்றிலும் முரணானதாக உள்ளது.

இஸ்ரேலிடம் உள்ள அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், குறுகிய தொலைவிலிருந்து, சுட்டு வீழ்த்தப்படும் என்ற கவலை பெரிதளவில் இல்லாத, துல்லியமாக தாக்கவல்ல குண்டுகளை வீசும் திறன் படைத்ததாக உள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் இரானின் எஸ்300 ஏவுகணை கட்டமைப்பை தொலைதூர ஆயுதங்கள் மூலம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இதில், இரான் வான் பாதுகாப்பு அமைப்பால் ஏற்படும் பெருமளவு அச்சுறுத்தல்கள் அழிக்கப்பட்டன.

சமீப நாட்களாக இஸ்ரேலிய வான் படை, தரையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ரேடார்கள் மற்றும் லாஞ்சர்களை (launchers) குறிவைத்து வருகிறது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, இரானின் பதில் தாக்குதல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு தயாராகும் வகையில், இரானுக்குள் உளவுப் பிரிவினர் அனுப்பப்பட்டனர்.

இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைப்பதற்காக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் முகவர்கள் அந்நாட்டுக்குள் டிரோன்களை கடத்திவந்து பயன்படுத்தினர்.

இரானின் உயர்மட்ட படைத் தளபதிகளும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதன் மூலமும் இரானின் பதில் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டன.

இரானால் இப்போதும் மீண்டும் தாக்க முடியுமா?

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை கையிருப்பு இரானிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியது.இஸ்ரேல் தன் தாக்குதல்களை தொடங்குவதற்கு முன்பாகவே, மத்திய கிழக்கின் “மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை” என அமெரிக்கா விவரிக்கும் ஏவுகணை அமைப்பு இரானிடம் இருந்தது.

அதன் எண்ணிக்கை 2,000 முதல் 3000க்கு இடைப்பட்டதாக இருக்கும். அந்த ஏவுகணை அமைப்புகள் சிலவும் அவற்றை தயாரிக்கக்கூடிய ஆலைகளும் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டன. இரானின் தரைவழியே தாக்கி அழிக்கக்கூடிய, மூன்றில் ஒருபங்கு லாஞ்சர்களை தாங்கள் அழித்ததாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், டெஹ்ரானால் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீச முடிந்தது, அவற்றில் சில இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவி தாக்கியது.

தற்போது இரானின் தரைவழியிலான லாஞ்சர்களுள் மூன்றில் ஒருபங்கை அழித்தவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், இரானின் ஏவுகணை அமைப்புகள் குறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அழிக்கப்படவில்லை. இது, இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நேரடியான அச்சுறுத்தலாக உள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களையும் தாண்டி, இரானிடம் இன்னும் பல குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன.

பாதுகாப்பு தொடர்பான சிந்தனை மையமான ருசி (Rusi) அமைப்பின் ஜஸ்டின் ப்ராங்க் கூறுகையில், டெஹ்ரானை விட தாங்கள் வான் பாதுகாப்பு அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதாக இஸ்ரேல் கூறினாலும், அதை இன்னும் அந்நாடு அடையவில்லை. மேலும், இரானிடமிருந்து வரும் குறுகிய தூர ஏவுகணைகளால் இன்னும் அச்சுறுத்தல் உள்ளது.

இரானுக்கு நட்பு நாடுகள் உள்ளதா? அவை என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, திங்களன்று டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய குடியரசு இரான் செய்தி நெட்வொர்க் அமைப்பால் பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் தாக்கியது.ராணுவ ஆலோசனைகள், ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாக, காஸாவில் ஹமாஸ் மீதும் லெபனானில் ஹெஸ்பொலா மீதும் இரான் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தியுள்ளது.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இஸ்ரேலிய நடவடிக்கையால், தன் எல்லைகளிலிருந்து இஸ்ரேலை அச்சுறுத்துவதற்கான அந்த அமைப்புகளின் திறன் பெருமளவில் குறைந்துள்ளது. காஸாவில் ஹமாஸ் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ஹெஸ்பொலாவின் பலம், தனக்கு நிதியுதவி வழங்கும் ஒரு நாட்டின் (இரான்) மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற முடியாத அளவுக்கு குறைந்துள்ளது.

ஏமனில் மிக தொலைவில் ஹூத்திகள் இருந்தபோதிலும், அவர்களால் அவ்வப்போது இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீச முடிந்தது.

இந்தாண்டு தொடக்கத்தில் ஹூத்தி அமைப்பு, அமெரிக்காவின் குண்டுவீச்சிலிருந்து தப்பித்து, சில அமெரிக்க ரீப்பர் டிரோன்களை, குறுகிய தூர தரை மற்றும் கடல் வாயிலாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மூலமாக சுட்டு வீழ்த்தியது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மற்ற நாடுகள் இதில் என்ன செய்ய முடியும்?

இந்த பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் நலன்களை தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. இராக்கில் இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுக்கள், அப்பிராந்தியத்தில் மேற்கத்திய ராணுவ தளங்களை இலக்கு வைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மோசமான சூழல்களுக்கு தயாராகி வருகிறது.

பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ துருப்புகளுடன் 100 பிரிட்டன் துருப்புகள் உள்ளன. அவர்களின் பாதுகாப்பு கருதியே, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் சைப்ரஸுக்கு கூடுதலாக ஆர்ஏஎஃப் டைஃபூன் விமானங்களை அனுப்புவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டார்.

பஹ்ரைனில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கடற்படையினரும் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் எந்தளவுக்கு செல்கிறதோ, அந்தளவுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள மேற்கத்திய படைகளுக்கு ஆபத்து அதிகரிக்கும்.

ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் (Straight of Hormuz) உள்ள உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதையை தடுப்பதற்கான அல்லது செயலிழக்கச் செய்வதற்கான திறன் இரானிடம் உள்ளது. இந்த மோதலை விரிவாக்குவது இரானுக்கு விவேகமான யோசனையாக இருக்காது, ஆனால் அந்த முடிவை தேர்ந்தெடுத்தால் அந்நாட்டால் அதை செய்ய முடியும்.

இஸ்ரேலால் அதன் இலக்கை அடைய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய சூழலில் இஸ்ரேலின் கை ஓங்கியுள்ளது, ஆனால் இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்வது, அமெரிக்க ஆதரவை சார்ந்தே பெரிதும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பில் ராணுவ உதவியை பெறுகிறது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களிலிருந்து ஏவப்படும் ஆயுதங்கள் பலவும் அமெரிக்காவிலிருந்தே இஸ்ரேலுக்கு வந்துள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்கும் கூட இடைமறிக்கும் ஏவுகணைகள் சிலவும் அமெரிக்காவில் தான் தயாரிக்கப்பட்டவை.

இரானின் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி கட்டமைப்புகளை தாக்குவதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் ‘பதுங்குகுழிகளை தாக்கவல்ல வெடிகுண்டுகள்’ பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டவை. அவற்றை பயன்படுத்துவதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் அதி உயர் தலைவர் அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டங்களை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று, இரானின் ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி வளாகத்துக்குள் ஊடுருவத் தேவைப்படும் ஒரே ஆயுதமான 13,600 கிலோ பெரியளவிலான வெடிகுண்டை (Massive Ordnance Penetrator) இஸ்ரேல் அணுக அமெரிக்கா அனுமதிக்கவில்லை, இதையும் அமெரிக்க B2 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களால் (US B2 strategic bombers) மட்டுமே வழங்க முடியும்.

அமெரிக்க ராணுவ ஆதரவு தொடர்ந்தாலும் இஸ்ரேலுக்கு சில வரம்புகள் இருக்கும். இஸ்ரேலின் விமானப் படையின் பலம், இரானின் அணுசக்தி திட்டத்தை பின்னுக்குத் தள்ளக்கூடும், ஆனால் அது அதை அழிக்காது. இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் இஸ்ரேலின் நம்பிக்கை மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

விமானத் தாக்குதல்கள் பயத்தையும் குழப்பத்தையும் சேதங்களையும் உருவாக்கக்கூடும். ஆனால், 2011ம் ஆண்டில் லிபியாவைப் பற்றியோ அல்லது காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலையோ நினைத்துப் பாருங்கள், அவை அரிதாகவே தெளிவான வெற்றியை அளிக்கின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு