யாழ்ப்பாணத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இளைஞனிடம் இருந்து 11 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.   கைது செய்யப்பட்ட இளைஞனை  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

Spread the love

  இளைஞன் கைதுகஞ்சா வியாபாரம்புலனாய்வு பிரிவினா்