Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரானா? இஸ்ரேலா? இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் உலகம் – இந்தியாவின் ஆதரவு யாருக்கு?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜூலை 2017-ல் பிரதமர் மோதி இஸ்ரேலுக்கு சென்றார், இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.29 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த வாரம் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், உலகமே இரு துருவமாக பிரிந்திருக்கிறது. இந்நிலையில், ஏதோ ஒரு சார்பை எடுப்பது இந்தியாவுக்கு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு மாதத்துக்கு முன், பாகிஸ்தானின் சில பகுதிகளை இந்தியா தாக்கியபோது, இஸ்ரேல் வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்தது.
பாகிஸ்தான் இன்னும் இஸ்ரேலை ஒரு நாடாக கூட அங்கீகரிக்காத நிலையில், இந்தியாவை ஆதரிப்பது இஸ்ரேலுக்கு சுலபமானதாக இருந்தது. ஆனால் மறுபுறம், இரானுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையே மிக சிறப்பான உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு மற்ற அரசுகளை விட இஸ்ரேலிடம் மிக தளர்வாக நடந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், மேற்கு ஆசியாவை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு யார் ஒருவர் பக்கமும் சார்பெடுப்பதை விட இருதரப்பையும் சமமாக நடத்துவதில் குறியாக இருந்திருக்கிறது.
இந்தியா இஸ்ரேல் தரப்புக்கு கூடுதல் சாதகமாக இருக்கிறது என்று கூறும் அளவுக்கான பல சம்பவங்கள் கடந்த நான்கு நாட்களில் நடந்துள்ளன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எடுத்துக்காட்டாக, காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, ஜூன் மாதம் 12ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக 149 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் போர்நிறுத்தத்துக்கு எதிராக வாக்களித்தன, 19 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த 19 நாடுகளை பார்க்கும்போது, இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் உலக அரசியலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இல்லாதவை. பனாமா, தெற்கு சூடான், டோகோ, மலாவி உள்ளிட்டவைதான் இந்த நாடுகள். போர்நிறுத்தத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளில் வல்லரசான அமெரிக்காவும் ஒன்று, ஆனால் எஞ்சிய 11 நாடுகளுக்கு சர்வதேச அரங்குகளில் எந்த சிறப்பு செல்வாக்கும் இல்லை. உதாரணமாக, ஃபிஜி, பலாவ், பப்புவா நியு கினி, டோங்கா போன்ற நாடுகள் இவற்றில் அடங்கும்.
ஆனால், போர்நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 149 நாடுகளில், உலக அரசியலில் முக்கியத்துவம் கொண்ட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உள்ளன. சீனா, ஜப்பான் முதல் மொத்த ஐரோப்பாவும் இதில் அடங்கும். ஆனால், இந்த முக்கிய நாடுகளுடன் இந்தியா இல்லை. இந்தியா உறுப்பினராக இருக்கும் சர்வதேச அமைப்புகளிலும், இஸ்ரேலை பொறுத்தவரை அது வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானுடனான உறவுகளுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இரானின் சபாஹர் துறைமுக திட்டத்துக்காக இந்தியா மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது.ராஜ்ஜீய உறவில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள்
இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஜூன் 14ஆம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organization – SCO) ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவும் SCO-வில் ஒரு உறுப்பினர், ஆனால் ஜூன் 14ஆம் தேதியே, SCO-வின் அறிக்கையில் பங்கேற்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இன்னொருபுறம், இந்தியா பிரிக்ஸ் அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ளது, ஆனால் பிரிக்ஸ் அமைப்பின் அனைத்து நாடுகளும் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இங்கும் இந்தியா தனித்து விடப்பட்டதாக தெரிகிறது. ஐநா பொதுச்சபையிலும் பிரிக்ஸ் அமைப்பின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் காஸாவில் போர்நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்த நாடுகள் இந்தியாவும், எத்தியோப்பியாவும் மட்டும்தான்.
குவாட் என்பது சீனாவுக்கு எதிரான அமைப்பாக பார்க்கப்படுகிறது, இதில், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இதிலும், ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் ஐநா பொதுச்சபையில் போர்நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இது போன்ற ஒரு சூழ்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
“ஐநா பொதுச்சபையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஒற்றுமையாக இல்லை, தற்போது இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் SCO அறிக்கையிலிருந்து இந்தியா தன்னை விலக்கிக்கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியாவில் எப்போதும் மிக கவனமாக ஒரு சமமான நிலைப்பாட்டை வைத்திருக்கும் இந்தியா, தற்போது ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறதா?,” என SCO-வில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆங்கில செய்தித் தாளான தி ஹிந்துவின் ராஜ்ஜீய விவகாரங்கள் ஆசிரியரான சுஹாசினி ஹைதர் எழுதியுள்ளார்.
இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல் எக்ஸ் தளத்தில், “ராஜ்ஜீய உறவில் நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) போன்ற அமைப்புகளில் உறுப்பினராக இருப்பது ஆகியவற்றை சமப்படுத்துவது ஒரு கடினமான சூழ்நிலை.”
ஐக்கிய நாடுகளுக்கு இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியாக இருந்த சையது அக்பருதீன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஜூன் 12 ஆம் தேதி ஒரு கட்டுரையை எழுதினார். அதில், இருதுருவமாக உள்ள இந்த உலகில் இந்தியாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளதாக கூறியிருந்தார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த சையது அக்பருதீன் ஒரு அங்கமாக இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி, “எதிரிக்கு எதிராக கடுமையான பழிவாங்கலுக்கு” அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவின் மெளனத்தின் பொருள்
“வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பது சில நேரம் மெளனமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிக்கலான சூழலில் மெளனத்துக்கு பல பொருள்கள் கொள்ளப்படுகின்றன. மோதியின் தலைமையின் கீழ், பண்ணுறவாண்மை மட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது மக்களின் கவனத்தை நம்மை நோக்கி திருப்பியுள்ளது. ஆனால், யாருடைய கவனத்தை ஈர்க்கும்போது, மக்கள் கண்காணிப்பதும் அதிகரிக்கிறது. இந்தியா என்ன செய்தது என்பது மட்டுமே கேள்வியாக இருக்கும் உலகம் இது அல்ல,” என அக்பருதீன் எழுதியுள்ளார்,
“இப்போது இந்தியா என்ன சொல்கிறது மற்றும் அது என்ன சொல்லவில்லை என்பது கேள்வியாக எழுப்பப்படும். இந்த முரண்பாட்டுக்கு இந்தியா ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். உங்களது அந்தஸ்து உயரும்போது, செயல் மற்றும் அமைதி என இரண்டையும் உலகம் மதிப்பீடு செய்யும். இந்தியா ஒவ்வொரு நெருக்கடி குறித்தும் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் உங்களது மெளனமே ஒரு செய்தியாகும்போது அது வெளியே வரவேண்டும். அமைதிக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கப்பட்டு, அந்த நம்பிக்கை வலுவடைகிறது.”
சையது அக்பருதீன் எழுதுகையில், “சர்வதேச தெற்கு என்பது ஒத்த கருத்து உள்ள ஒரு குழு அல்ல. அதன் ஆர்வமும், கொள்கையும் வேறுபடலாம். தலைமை தெளிவாகவும், நேர்மையாகவும், கொள்கைபிடிப்புடனும் இருக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களின் கவனம் இந்தியாவின் மீது பதிந்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
ப்ரூகிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் சிந்தனை குழுவில் ஒரு மூத்த உறுப்பினரான தன்வி மதன் எக்ஸ் தளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், “மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், வளைகுடா அரபு நாடுகள் மற்றும் இரான் ஆகியவற்றுக்குள் இடையில் சமப்படுத்தும் நிலைப்பாட்டை இந்தியா பாரம்பரியமாக பராமரித்து வருகிறது. ஆனால், இந்த முத்தரப்பு உறவு சமமானதாக இல்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோதி தெரிவித்ததில் இஸ்ரேலுக்கு தெளிவான ஆதரவு இல்லை. ஆனால் இஸ்ரேலிய தாக்குதலை மோதி கண்டிக்கவில்லை.”
இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் ஒரு பாரம்பரியமான நட்பு உள்ளது ஆனால், அது வெளிப்படையாக இஸ்ரேலை கண்டிக்கிறது. சனிக்கிழமை, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவ் மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கண்டித்ததுடன், பதற்றத்தை குறைப்பதற்கு உதவ முன்வந்தார். இரான் பிரிக்ஸ் மற்றும் SCO இரண்டிலும் உறுப்பினராக உள்ளது.
இரானுடனான அதன் நட்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் இந்தியா நீண்ட காலமாக தயக்கத்தை காட்டி வருகிறது. 1991-ல் பனிப்போரின் முடிவுக்கு பின்னர் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த போது, உலகம் ஒரு புதிய திருப்பத்தை சந்தித்தது. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு வளர்ச்சியடைந்தபோது, அது இரானுடன் இந்தியா நெருங்குவதை எப்போதும் தடுத்தது.
1990-ல் இந்தியா சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு சில காரணங்கள் சர்வதேச காரணங்களாகும்.
1990-ல் தொடங்கிய வளைகுடா போர் இந்தியாவை நேரடியாக பாதித்தது. கச்சா எண்ணெய் விலைகள் சர்வதேச அளாவில் அதிகரித்ததுடன், இந்தியாவும் அதனால் பாதிக்கப்பட்டது. 1990-91-ல் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி இரண்டு பில்லியன் டாலர்களிலிருந்து 5.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இது கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அளவு அதிகரிப்பு ஆகியவற்றால் நேர்ந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு