Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பலாலி பகுதியில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி அப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதி மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாத நிலையில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
குறித்த வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் வந்து வழிபட தற்காலிகமாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையூடாக சென்று அம்மனை வழிபட முடியும். விரைவில் ஆலயத்திற்கு செல்லும் வீதி விடுவிக்கப்படும்.
அதேவேளை பலாலி கிழக்கு பகுதியை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவித்து , காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இராணுவத்தினரும் அதற்கான நல்லெண்ண சமிக்சைகளை காட்டியுள்ளனர்.
தற்போது இப்பிரதேசம் காடுகளாக காணப்படுகிறது. விரைவில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு செந்தழிப்பன பிரதேசமாக மாறும் என தெரிவித்தார்.