இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து விமானி உட்பட 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற  உலங்குவானூா்தி ஒன்று கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து  விபத்துக்குள்ளானதில்  அதில் 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்  வெளியாகியுள்ளது . இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு  புறப்பட்ட  ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான  குறித்த உலங்குவானூா்தி , மோசமான வானிலை காரணமாக   விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டுள்ளது.   சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது

கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த விபத்தோடு சேர்த்து 5-வது முறையாக உலங்குவானூா்தி  விபத்தில் சிக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது