உலகிலேயே அதிநவீன வான் பாதுகாப்புக் கவத்தை வைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக் கவசத்தை எல்லாம் உடைத்துக்கொண்டு இஸ்ரேலில் கடுமையான தேசத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள்.

இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாகஇராணுவ இலக்குகள் மீதான பிற பிற இலக்குகள் மீதான தாக்குல்களின் இழப்புகள் குறித்து செய்திகள் வெளியாகத போதும் பொதுமக்கள் பார்வைக்குட்பட்ட இலக்குள் மீதான தாக்குதல் குறித்த காணொளிகள் புகைப்படங்கள் மக்களால் வெளியிடப்பட்டுள்ளன. அதை இஸ்ரேலால் தடுக்க முடியவில்லை.

இஸ்ரேல் மீது ஈரான் இரவு முழுவதும் நடத்திய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது, 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈரான் சுமார் 80 ஏவுகணைகளை வீசியதாகவும், இதனால் ஹைஃபாவில் உள்ள பசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. ஈரானிய நடவடிக்கையில் தாங்களும் பங்கேற்றதாக ஏமனின் ஹவுத்திகள் கூறுகின்றனர்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், தெஹ்ரான் தற்காப்புக்காக செயல்படுவதாகவும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தியவுடன் பதற்றம் தணியும் என்றும் கூறினார்.

இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ஃபஹானில் உள்ள ஒரு பாதுகாப்பு வசதியையும், ஷிராஸில் உள்ள ஒரு மின்னணு தொழிற்சாலையையும் தாக்கி, ஈரானிய குடிமக்களுக்கு புதிய அச்சுறுத்தல்களை விடுத்து, “ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் ஆதரவு நிறுவனங்களை” சுற்றியுள்ள பகுதிகளை விட்டு வெளியேறச் சொல்லி வருகிறது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கும் வாஷிங்டனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். மேலும் அமெரிக்காவை எந்த வகையிலும், வடிவத்திலும் தாக்குவதற்கு எதிராக தெஹ்ரானை எச்சரிக்கிறார். 

மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேல் தனது வான்வெளி மூடப்பட்டிருக்கும் என்று கூறுகிறது, அதே நேரத்தில் ஈரானும் தனது வான்வெளி மூடலை இன்று பிற்பகல் 3 மணி வரை (GMT 11:30) நீட்டித்துள்ளது.