இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பாகிஸ்தான் மற்றும் சௌதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இஸ்ரேல், இரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கத்தார், சௌதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை இஸ்ரேல் மீறுகிறது என்று கத்தார் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது. சௌதி அரேபியா இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்ட மீறல் என்று அழைத்துள்ளது.

இரான் அரசு ஊடக செய்திப்படி வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

இரானும், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு பதில் தாக்குதல் நடத்தியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் அரசு ஊடக செய்திப்படி வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர்.கத்தார் கூறுவது என்ன?

கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் செயல் இது என்றும் கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த உலக நாடுகள் பலவும் முயன்று கொண்டிருக்கின்ற இந்த சூழலில், இஸ்ரேல் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கத்தார் கண்டித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த செயலை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கத்தார் கோரிக்கை வைத்துள்ளது. இஸ்ரேலை தடுத்து நிறுத்துவது தாமதமானால், மத்திய கிழக்கில் பல மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், இப்பிராந்தியத்தில் அமைதிக்கான சாத்தியங்களை முடிவுக்குக் கொண்டு வரும். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு மட்டுமின்றி சர்வதேச பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் என்றும் கத்தார் அறிவித்துள்ளது.

ஐ.நாவுக்கான கத்தாரின் நிரந்தர பிரதிநிதியான ஜஸிம் யாகூப் அல்-ஹமாதி, இந்த தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச அமைப்புகள் அழுத்தம் தர வேண்டும்,” என்று வியன்னாவில் கேட்டுக் கொண்டார்.

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்கள் – மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?சௌதியின் கருத்து என்ன?

இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ள சௌதி, இந்த தாக்குதல் இரானின் இறையாண்மை, பாதுகாப்பு போன்றவற்றை குறைமதிப்புக்குள்ளாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் அது கூறியுள்ளது.

சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்பு கொண்டு இரான் மீதான தாக்குதல் குறித்தும், மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்தும் அலைபேசி மூலம் பேசியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இரு தரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஒப்புக் கொண்டதாகவும் சௌதி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பேசியுள்ளார் சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மான் ஓமன் மற்றும் குவைத் சொல்வது என்ன?

ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

“இந்த தாக்குதல்கள் ஆபத்தானவை. சர்வதேச சட்டங்களின் கொள்கைகளை மீறும் செயல். இதனை ஏற்றுக் கொள்ள இயலாது. இது மத்திய கிழக்கின் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உள்ளாக்கும் செயல்,” என்றும் ஓமன் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இது ராஜ்ஜாங்க நடவடிக்கைகளை தடுத்து, பெரிய அளவிலான மோதலை தூண்டிவிடும் வகையில் இருப்பது தெளிவாகிறது. பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவிலான அமைதியில் தீவிர பின்விளைவுகளை இந்த தாக்குதல்கள் ஏற்படுத்தும்.” என்கிறது அந்த அறிக்கை.

இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சர்வதேச அமைப்புகள் முன்வர வேண்டும் என்றும் ஓமனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தன்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. “இது இரானின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல். இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் வகையில் இந்த தாக்குதல் உள்ளது. சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறியுள்ளது,”என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய, இந்த மீறல்களைத் தடுப்பதில் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுமாறு ஐநா பாதுகாப்பு கவுன்சிலை குவைத் கேட்டுக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓமன், கத்தார், குவைத் போன்ற நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன துருக்கி, இராக் கூறுவது என்ன?

துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

“இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறும் ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கை இந்த பிராந்தியத்தில் ஸ்திரமற்றத்தன்மையை அதிகரிக்கும் ,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“இரானின் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், நெதன்யாகுவின் அரசு எந்த ஒரு பிரச்னைக்கும் ராஜாங்க முறையில் தீர்வு காண விரும்பவில்லை என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக இந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் உலக அமைதியை பணயம் வைக்க இஸ்ரேல் சிறிதும் தயங்கவில்லை.”

“பெரிய அளவிலான மோதல்களுக்கு வழி வகை செய்யும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “மத்திய கிழக்கில் அழிவுகளைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இந்த போரை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க நாங்கள் சர்வதேச அமைப்புகளை அழைக்கின்றோம், ” என்றும் அது கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை அச்சுறுத்தும் நடவடிக்கைமத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இஸ்ரேலின் தாக்குதல் என்று இராக் அரசு தெரிவித்துள்ளது.

இராக்கின் அரசு செய்தித் தொடர்பாளர் பஷிம் அலவாதி, “இரானிய பிராந்தியத்தின் மீது யூத அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனங்கள். இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை கொள்கைகளையும் மீறும் நடவடிக்கை இது,” என்று கூறினார்.

“இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் நடைபெற்ற இந்த தாக்குதல் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை அச்சுறுத்தும் நடவடிக்கை. சர்வதேச அமைப்புகள் இந்த விதிமீறல்களை பார்வையாளர்கள் போன்று அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி ஆலோசனை நடத்தி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என்றும் கூறினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பாகிஸ்தான் கூறியது என்ன?

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிட்ட அவர், “இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

“இது மிகவும் தீவிரமான அதேநேரத்தில் பொறுப்பற்ற செயல்பாடு. அதிக கவலை அளிக்கக் கூடியதாக இது உள்ளது. ஏற்கனவே நிலைத்தன்மையற்று இருக்கும் இந்த பிராந்தியத்தின் நிலைiமயை மேலும் சீர்குலைக்கும் செயல் இது” என்றும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷெபாஸ் ஷெரீஃப், “சர்வதேச அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இதில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, இந்த பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு ஆபத்து விளைவுக்கும் எந்த ஒரு செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு