இரானில் இஸ்ரேல் தாக்கிய இடங்கள் எவை? அணு ஆயுத கட்டமைப்புகள் குறி வைக்கப்பட்டனவா?

பட மூலாதாரம், Getty Images

43 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் – இரான் இடையேயான பதற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளி இரவு அன்று இரானின் அணு ஆயுத மையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதில் நடவடிக்கையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

அப்போதிலிருந்து இரு நாடுகளும் மாறி மாறி மற்றவர் வான் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. சனிக்கிழமை இரவிலும் கூட இஸ்ரேல் மற்றும் இரான் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

தனது எண்ணெய் நிலைகள் மீது இஸ்ரேல் பல தாக்குதல் நடத்தியதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் இரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல் அவிவ் நகர் அருகே உள்ள கட்டடங்களை இரான் தாக்கியதாக கூறும் இஸ்ரேல் இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இரானில் எந்தெந்த இடங்கள் குறிவைக்கப்பட்டன?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதுகடந்த வெள்ளி இரவு முதல் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் இரானின் அணு ஆயுத நிலைகளை இஸ்ரேல் குறிவைத்தது. இந்த தாக்குதல்களில் மூன்று மூத்த ராணுவ அதிகாரிகளும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சனி இரவு மற்றும் ஞாயிறு காலை கூட இரானில் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு மற்றும் டெஹ்ரானில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கு ஆகியவை இஸ்ரேலின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக இரான் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவை போக தெற்கு புசேஷரில் உள்ள பெரிய எரிவாயு கிணறுகளும் குறிவைக்கப்பட்டதாக எண்ணெய் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இரானிய ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் (ஐ.டி.எஃப்) படி, டெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்த இஸ்ரேல் ஒரு கட்டடத்தையும் சேதப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பும் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைகள் இரானின் அணு ஆயுத திட்டங்களுடன் தொடர்புடையதால் தாக்கப்பட்டதாக ஐடிஎஃப் கூறுகிறது.

மேலும் சனி இரவன்று, மேற்கு இரானில் நிலம் விட்டு நிலம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மற்றும் கடல் ஏவுகணைகளை பதுக்கி வைத்திருந்த ஒரு பாதாள இடம் ஐடிஎஃப்-ஆல் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ஃபஹான் நகரமும் தாக்கப்பட்டது

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பேட் யாம் நகரில் இரானின் தாக்குதலில் தரைமட்டமான கட்டடங்கள்ஞாயிறு அன்று இரானின் முக்கிய நகரமான இஸ்ஃபஹானிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

மத்திய இரானில் அமைந்துள்ள இஸ்ஃபஹான் மாற்று ஆலை இரானின் அணு ஆயுத கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது போக, இரானின் மற்ற நகரங்களில் அமைந்துள்ள யுரேனியம் சுரங்கங்கள் மற்றும் இதர ஆலைகளும் இந்த கட்டமைப்பின் அங்கங்களாக உள்ளன.

ஒரு பெரிய விமானப்படை தளம் மற்றும் ராணுவ தொழிற்சாலை உள்ளிட்ட இரானின் பல முக்கிய ராணுவக் கட்டமைப்புகள் இஸ்ஃபஹானில் தான் உள்ளன.

ஏப்ரல் 2024-ல் கூட இந்தப் பகுதியில் விமானப்படை தளத்தை தாக்கி அங்கு அமைந்துள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும் இஸ்ரேல் சேதப்படுத்தியது.

இஸ்ஃபஹானில் உள்ள இந்த கட்டமைப்புகள் எல்லாம் அமைதி நோக்கங்களுக்கானது மட்டும் தான் என இரான் தெரிவிக்கிறது. ஆனால் இஸ்ரேல் மற்றும் பல மேற்கத்திய நாடுகளும் இரான் இங்கு ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சந்தேகிக்கின்றன.

இஸ்ரேலில் பலி எண்ணிக்கை எவ்வளவு?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரான் தாக்குதலில் ரெஹாவோ நகரில் உள்ள இந்த கட்டடம் தாக்கப்பட்டதுஇஸ்ரேலின் அவசரகால சேவையான மேகன் டேவிட் அடோம் (எம்டிஏ), டெல் அவிவ் நகருக்கு தெற்கே பேட் யாம் நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் மீதான இரானின் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் 69 வயது பெண்மணியுன், 89 வயது பெண்மணியும், ஒரு பத்து வயது சிறுவனும் ஒரு சிறுமியும் அடங்குவர்.

இந்நிலையில் இரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றி எரியும் காணொளி ஒன்று பிபிசிக்கு கிடைத்தது.

இரானின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய கட்டமைப்புகளை குறிவைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

மேலும் இரானின் புரட்சிகர காவல் படை, இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்தால் இஸ்ரேலை அதை விட வேகமாக இரான் தாக்கும் என எச்சரித்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு