சாவகச்சேரி நகரசபையின் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவில் வாக்களிக்கமுடியாது என உயர் நீதிமன்ற இடைக்கால கட்டளை வந்தநிலையில் குறித்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பேரவை எழுத்துமூலம் உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை முன்வைத்தது.

சபையை ஒத்திவைக்குமாறு தம்மிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கையினை உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் கூறி, சபையை ஒத்திவைக்க ஏனைய உறுப்பினர்களும் சம்மதமா அல்லது இதனை வாக்கெடுப்பு மூலம் முடிவெடுப்போமா என உறுப்பினர்களிடம் கேட்கையில்  தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ,தேசிய மக்கள் சக்தி ஆகியோர் சபையை ஒத்திவைப்பதா இல்லையா என்பதை பகிரங்க வாக்கெடுப்பை நடாத்தி முடிவெடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

ஏனைய உறுப்பினர்கள் சபையை ஒத்திவைக்க சம்மதமா அல்லது இதனை வாக்கெடுப்பு மூலம் எடுப்போமா என கேட்ட உள்ளூராட்சி ஆணையாளர் திடீரென தனது கருத்திலிருந்து மாறி சட்டத்தின் பிரகாரம் தவிசாளர் தெரிவை நடாத்தியே தீருவேன் என்றார். 

முன்னர் சபையை ஒத்திவைக்க வாக்கெடுப்பு வேண்டுமா என உறுப்பினர்களிடம் கேட்டுவிட்டு வாக்கெடுப்பை உறுப்பினர்கள் கோரியபோது உள்ளூராட்சி ஆணையாளர் மறுத்தது ஏன்? என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் தமிழ் தேசிய பேரவை கடைசியில் அதிஸ்டத்தில் வெற்றிபெற்றது!