இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி ஜெனரல் ஹுசைன் சலாமி உயிரிழந்துள்ளார் என ஈரானிய ஊடகங்கள்     உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இதில் இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவாகக் கருதப்படும் ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர படையின் தலைமையகம் ஆகும்.

மேலும், ஈரானிய இராணுவத் தலைவர் மொஹமட் பாகெரி உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் பலரும் இந்தத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் தற்போது தனது வான்வெளி எல்லையை மூடியுள்ளது.

மேலும், “டஜன் கணக்கான இலக்குகள்” தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் உயர்மட்ட இராணுவத் தலைவர்களும் அணு விஞ்ஞானிகளும் அடங்குவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களையும்  இஸ்ரேல் தாக்கியது!

ஈரானின் அணு, ஏவுகணைத் தளங்களை இன்று அதிகாலை இஸ்ரேல் தாக்கியுள்ளது.

இத்தாக்குதல்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைகளின் தளபதி, அணு விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் நடைபெற்று தற்போது மூன்றாவது சுற்றுத் தாக்குதல்கள் நடந்த வண்ணமுள்ளன.