தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் 

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

அதன் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். 

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து , அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார். 

அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டு இருந்தால் , அந்த காணி உரிமையாளர்க்ளுக்கு காணியின் பெறுமதி நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்று காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். 

விகாரை பிரச்சனையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது அதனை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்