Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் தற்காலிக தங்குமிடங்களில் இரவைக் கழித்ததாக அவர் கூறினார்.
கிழக்கு கேப்பில் உள்ள OR டாம்போ, அமதோல் மற்றும் ஆல்ஃபிரட் ந்சோ ஆகிய மூன்று மாவட்டங்களில் 58 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்டை நாடான குவாசுலு-நடாலில், ஒன்பது மாவட்டங்களில் 68 பள்ளிகள் சேதமடைந்துள்ளன, ஆனால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
செவ்வாய்க்கிழமை முதல் கடும் பனி, மழை மற்றும் பலத்த காற்று காரணமாக கிட்டத்தட்ட 500,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் களத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது எனவும் மாகாண முதலமைச்சர் ஆஸ்கார் மபுயானே கூறினார்.
செவ்வாய்க்கிழமை காலை மத்தாதா நகரில் உள்ள ஒரு பாலத்தைக் கடக்கும்போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த நான்கு குழந்தைகள், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு நடத்துனரின் உடல்களும் அடங்கும்.
வாகனத்தில் இருந்த மேலும் நான்கு குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மபுயானே கூறினார். வாகனம் ஆற்றங்கரையில் யாரும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, பேருந்து ஓட்டுநர் உட்பட எட்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தனியார் தொலைக்காட்சி நிலையமான நியூஸ்ரூம் ஆப்பிரிக்காவிடம் ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை மூன்று குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், மரங்களில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தென்னாபிக்க ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பேருந்தில் 13 பேர் இருந்ததாகவும், அவர்களில் 11 பேர் பள்ளி மாணவர்கள் என்றும் இப்போது தெரியவந்துள்ளது.
இனவெறி எதிர்ப்புத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறப்பிடமான கிழக்கு கேப், குவாசுலு-நடால் மாகாணத்துடன் சேர்ந்து, பனிப்பொழிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, மேலும் உயிரிழப்புகளைத் தவிர்க்க இரண்டு மாகாணங்களிலும் சில முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.