சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நிஷான் தனசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவர், 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்து வரும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டு  காமினி பி. திசாநாயக்க,  தனது பதவி விலகல்  கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.