ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய பிரிட்டன் பயணி விபத்து பற்றிக் கூறியது என்ன?

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷ்எழுதியவர், ஆண்ட்ரே ரோடன்-பால் பதவி, பிபிசி நியூஸ் 12 ஜூன் 2025, 16:48 GMT

புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்

குறைந்தது 204 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாக காவல்துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்ததாக, ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

அந்த இருக்கையில் இருந்த பயணி பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷிடம் பேசியதாகவும், “விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அவர் தனது போர்டிங் பாஸை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் இடம் பெற்றுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷ், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று காவல் ஆணையர் மாலிக் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு கிளம்பிச் சென்ற விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் மருத்துவர்கள் தங்குமிடம் ஒன்றின் மீது மோதியது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இன்று காலை ஆமதாபாத்தில் நடந்த கோர விபத்தால் தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக” பிரிட்டன் அரசரும் அரசியும் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

“இந்த பயங்கரமான துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்கிறோம், அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திக்காக காத்திருக்கிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாமி இந்தியாவிலும் பிரிட்டனிலும் நெருக்கடிக் கால உதவிக் குழுக்களை ஏற்பாடு செய்துள்ளார்.

“பிரிட்டனை சேர்ந்தவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் FCDO (வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்) பிரிட்டன் குடிமக்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து துரிதகதியில் செயல்பட்டு வருகிறது என்பதையும், டெல்லியிலும் லண்டனிலும் ஒரு நெருக்கடிக் கால உதவிக் குழுவை உருவாக்கியுள்ளது என்பதையும் நான் உறுதிப்படுத்த முடியும்” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு