மதுரை: பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த உயர் அதிகாரி மன்னிப்பு கேட்டார் – காணொளிகாணொளிக் குறிப்பு, மதுரையில் பேருந்து ஓட்டுநரை உயர் அதிகாரி செருப்பால் அடித்த விவகாரம்: மன்னிப்பு கேட்ட அதிகாரிமதுரை: பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த உயர் அதிகாரி மன்னிப்பு கேட்டார் – காணொளி

10 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரையில் ஒரு பேருந்து ஓட்டுநரை அவரது உயர் அதிகாரி செருப்பால் அடித்த காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உதவி மேலாளர் மற்றும் பேருந்து ஓட்டுநர் இடையே ஒரு வாக்குவாதத்தின்போது இந்த சம்பவம் நடந்ததாகவும், இதையடுத்து அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதகாவும் மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் பிபிசி தமிழிடம் கூறினார் .

இந்த நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உதவி மேலாளர் மாரிமுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு