கடந்த ஆண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சில சிறைச்சாலைத் கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து CID சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

  அனுராதபுரம்ஜனாதிபதி மன்னிப்புதிலகரத்ன