Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் பேரில் குற்றவாளியொருவரை விடுவித்தமை தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இடை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட நிதி மோசடி குற்றவாளியான டபிள் யூ.எச். அதுல திலகரத்னவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிவிட்டதாக கூறி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் கைது செய்யப்படடிருந்தார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர்கள் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் விடுவிக்கப்படவேண்டியவர்களுள் டபிள்யூ.எச். அதுல திலகரத்னவின் பெயர் சேர்க்கப்படவில்லை. அவ்வறான நிலையில் ஜனாதிபதியின் அனுமதியின்றி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமையினையடுத்தே கைது முன்னெடுக்கப்பட்டதுடன் பதவி பறிப்பும் நிகழ்ந்தேறியுள்ளது.