அனுர அரசை தர்மசங்கடத்தினுள் சிக்கவைத்துள்ள கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை சுங்க சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்ட விடயம் நாள் தோறும் சர்ச்சைகளை தோற்றுவித்துவருகின்றது.

இதனிடையே அதற்கு பொறுப்பான சுங்க திணைக்கள அதிகாரிகள் குழு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் குழு பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பயணத் தடையைப் பெற குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை வாக்குமூலமளிக்க ஆஜரானபோது  உதய கம்மன்பில கொள்கலன்களில் பொருட்களை இறக்குமதி செய்த வர்த்தக நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் பட்டியலில் ஆயுதங்கள் எவையும் உள்ளடங்கியிருக்கவில்லை.

முன்னதாக சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினரான அருச்சுனா விடுதலைப்புலிகளிற்கு சொந்தமான ஆயுதங்கள் அக்கொள்கலன்கள் மூலம் தருவிக்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.