தென்னிந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 144 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான வான் ஹை 503 இல் இருந்து பணியாளர்களை மீட்பதற்காக இந்திய கடலோர காவல்படை நான்கு கப்பல்களை அனுப்பியது.

திங்கட்கிழமை காலை கப்பலில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் குழுவினர் தெரிவித்தனர். வெடிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

கடலோர காவல்படை விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், கப்பலில் இருந்து பெரிய அளவில் கரும்புகை வெளியேறுவதைக் காட்டியது.

தீ பல கொள்கலன்களுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது, இதனால் குழுவினர் கப்பலை கைவிட்டு உயிர்காக்கும் படகுகளில் ஏற்றப்பட்டனர்.

கப்பலில் 22 தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில்18 பேர்  கடலில் குதித்தனர். அவர்கள் உயிர்காக்கும் படகில் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புபணிகள் தொடர்கின்றன.

மீட்கப்பட்ட மாலுமிகளில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நான்கு பணியாளர்கள், ஒரு தைவான் நாட்டவர், இரண்டு இந்தோனேசியர்கள் மற்றும் ஒரு மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். மற்றவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.