கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அவருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் இன்று (9) ஆணைக்குழுவில் ஆஜரானார்.

அத்துடன் மனைவி அமலி ரம்புக்வெல்லவிடமிருந்தும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்தது. 

இதைவேளை  கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவும் ஆணைக்குழுவால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மகன் மற்றும் மகளின் பெயரில் பராமரிக்கப்படும் சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகள் குறித்து மத்திய வங்கி மூலம் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.