யாழ் – செம்மணி மனிதப் புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேச கண்காணிப்புடன் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும் .அத்துடன்  நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி அகழ்வுப் பணியை இடைநிறுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தி இன்றையதினம் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.