Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீனவத்தொழிலுக்காக கடலுக்குச்சென்ற அப்பாவிகள் மீது கடற்படை; அத்துமீறி நடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். சந்தேக நபர்களாக எவரும் சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் செயற்பாட்டை நிறுத்த வேண்டுமெனவும் றிசாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அனுமதியைக் கடற்படைக்கு கொடுத்து யார்? சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம் காலி,ஹம்பாந்தோட்டை,மாத்தறை போன்ற பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் வடக்கு,கிழக்கில் மட்டும் அதற்குத் தடை ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிபந்தனையை மீனவர் மீறினால் கடற்படையினர் பொருட்களைப் பறிமுதல் செய்வார்கள், எச்சரிப்பார்கள். ஆனால், இன்று துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு வந்துள்ளார்கள் இந்த சம்பவம் அந்தப்பிரதேசத்தில் இனவாதமாகவே பார்க்கப்படுகின்றதெனவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.