ரஷ்யாவையும் கிரிமியன் தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தில் சாலைப் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெர்ச் பாலத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னால் தாங்கள் இருப்பதாக உக்ரைனின்  பாதுகாப்பு சேவை உரிமை கோரியது. நீருக்கடியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி சாலை மற்றும் தொடருந்துப் பிரிவுகள் இரண்டையும் தாக்கியதாகக் கூறியது.

பாலத்தின் நீருக்கடியில் உள்ள தூண்களில் ஒன்றில் இணைக்கப்பட்ட 1,000 கிலோகிராம் வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாகக் கூறியது.

உக்ரைனின்  பாதுகாப்பு சேவைவெளியிட்ட காட்சிகளில், நீருக்கடியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைக் காட்டியது. மேலும் பாலத்தின் பக்கவாட்டில் வெளிப்படையான சேதத்தைக் காட்டும் ஒரு நிலையான படமும் இருந்தது. இருப்பினும், சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை.