Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அரசின் இனவாத நடவடிக்கைகளை கண்டித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை (4) முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தினரால் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி நாளை (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
அதேவேளை குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள் “மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து, குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, தமிழரின் நிலம் தமிழருக்கே சொந்தம், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என கோசமிட்டு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.