Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சிறீதரன் ஆதரவாளர் என்பதால் அம்பாறையில் பதவியேற்க தடுக்கப்படும் ஜெயசிறில் என பதிவிட்டுள்ளார் தமிழரசு ஆதரவாளர் ஒருவர்
அம்பாறை காரைதீவு பிரதேச சபையில் தமிழரசு கட்சி :- 4,முஸ்லீம் காங்கிரஸ் :- 2,NPP :- 3 ,மயில் :- 1,சுயட்சை :- 1
முஸ்லீம் காங்கிரஸ் உடன் தமிழரசு கட்சி செய்த ஒப்பந்தத்திற்கு அமைய 6 உறுப்பினர்களுடன் காரைதீவில் தமிழரசு கட்சி ஆட்சிமைக்க முடியும்.
ஆனால் சிறீதரனின் தீவிர ஆதரவாளர் என்பதால் காரைதீவில் ஜெயசிறிலை தவிசாளராக வரவிடாது தடுப்பதற்கு திட்டம் தீட்டிய சுமந்திரன் சொன்ன காரணம் “முஸ்லீம் காங்கிரஸ் உங்களை விரும்புகின்றார்கள் இல்லை” என்பது.
வடக்கில் சங்கு 5 சபை கேட்ட போது தலையாட்டியிருக்கலாமே? யாழில் தமிழரசு 13 சபையில் ஆட்சியமைத்திருக்க முடியும். மட்டக்களப்பு சித்தாண்டியிலும் இதே முஸ்லீம் காங்கிரஸ் கதையை சொல்லி சப்பை சாட்டு தான் சொல்லப்பட்டது.
காரைதீவு ஜெயசிறிலின் இன்றைய சம்பவத்தில் ஒரு இடத்தில் பெருமை படவேண்டும், சுமந்திரனும் சாணக்கியனும் “ஜெயசிறில் வேண்டாம்” என சொன்னவுடன் CVK அவர்களும் கோடீஸ்வரன் அவர்களும் சுமந்திரனின் உருட்டு கதையை எதிர்த்து “இல்லை, அம்பாறை, காரைதீவு பிரதேச சபையின் தெரிவுகளை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று வாதிட்டதையடுத்து சுமந்திரனால் அவ்விடத்தில் ஒன்றும் பேச முடியாத நிலை ஏற்பட்டது.
உடனே சுமந்திரன் “சரி நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்” என்று அவர்களை அனுப்பிவிட்டு, மீண்டும் ஒரு மணித்தியாலத்தில் தொலைபேசி அழைப்பு எடுத்து திரும்பவும் மட்டக்களப்பில் உள்ள சாணக்கியனின் காரியாலயம் வரும்படி சொல்லியுள்ளார்.
அங்கு சென்ற ஜெயசிறிலிடம் “உங்களை தவிசாளராக நிறுத்த முஸ்லீம் காங்கிரஸ் இணக்கமில்லை. ஆகவே நான்(சுமந்திரன்) சொல்லுபவரை நியமித்தால் தான் ஆதரவு தருவார்கள்” என்று சுமந்திரன் சொன்னதும், அங்கிருந்த தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவேசமாக கேள்வி கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
உறுப்பினர்களிடையே கோபமான கருத்துக்கள் ஏற்படுவதை உணர்ந்த சுமந்திரன் (திருகோணமலையில் நடந்த சம்பவம் நினைவு வந்திருக்கும் தானே.) மீண்டும் 9ஆம் திகதி சந்தித்து கதைப்பம் என்று சொல்லிவிட்டு, மெதுவாக கழண்டு சென்றது சுமந்திர சாணக்கிய அணி.
வடமாகாணத்தில் பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க முடியாது ஊசல் ஆடுகிறது. அதைவிட்டுவிட்டு சுமந்திரன் ஏன் கிழக்கில் வந்து குழப்பவேண்டும் என பலர் பேசினார்கள்.
வடக்கு மாகாணத்தில் தமிழரசை அழித்தது காணாது என்று கிழக்கிலும் அந்த நிலையை கொண்டுவருவதற்காக சாணக்கியனோடு சேர்ந்து நீங்கள் செயற்படுகின்றீர்களா என சுமந்திரனை கேள்வி கேட்டார்கள்.
ஜெயசிறில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக கடந்த முறையும் பதவி வகித்தவர். சிறீதரனின் தீவிர ஆதரவாளர். தீவிர தமிழ்த்தேசியவாதி. சுமந்திரனின் அரசியல் சாயலுக்கு எடுபட மாட்டார். இந்த காரணங்களால் தான் ஜெயசிறிலை வரவிடாமல் தடுக்க சுமந்திரன் கடும் முயற்சி எடுக்கிறார்.